என் இதயம் யாருக்கு தெரியும்
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் – (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே – (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – (2)
Comments
Post a Comment